நியூயார்க் நகரை உலுக்கிய கடும் துயரமான சம்பவம்: வெளிவரும் பகீர் தகவல்
நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 சிறார்கள் உட்பட பலர் உடல் கருகி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூயார்க் நகர வரலாற்றில் இதுபோன்ற மிக மோசமான தீ விபத்து ஏற்பட்டதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை குறித்த 19 மாடி கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான உறுதியான காரணம் தெரியவரவில்லை என்றாலும், உள்ளூர் நேரப்படி பகல் 11 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், இது நகரத்தின் வரலாற்றில் மிக மோசமான தீ விபத்து எனவும், இதன் தாக்கம் அனைவராலும் உணரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதுவரை 9 சிறார்கள் உட்பட 19 பேர்கள் உடல் கருகி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 13 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் கடுமையான மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஃபோர்டாம் ஹைட்ஸ் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தை சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.