பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் ஜேர்மனி... வீடுகள், கடைகள் சூறையாடப்படும் அவலம்
பெருவெள்ளப் பேரழிவால் ஜேர்மனி தத்தளிக்கும் நிலையில், கைவிடப்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் உயிர் பயத்தில் வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள பேரழிவுகரமான பகுதிகளில் பொலிசார் தற்போது ரோந்து பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
North Rhine-Westphalia மாகாணத்தின் Stolberg பகுதியில் பல்வேறு கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. வீடு புகுந்து உடைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையிட்டு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, நகைக்கடை ஒன்றில் கொள்ளையிட்டதாக கூறி பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர். Stolberg பகுதியில் மட்டும் தற்போது நூற்றுக்கணக்கான பொலிசார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, கொள்ளை சம்பவங்களை தடுக்கும் நோக்கில் பெல்ஜியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அறிவித்துள்ளனர்.
வரலாறு காணாத வெள்ளத்திற்கு ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் மட்டும் இதுவரை 110 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1,300கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளனர். மேலும் அணைகள் உடையலாம் என்ற பீதியும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.