இனி வெளிநாடு செல்லலாம்... பிரித்தானியர்களுக்கான தடுப்பூசி கடவுச்சீட்டு இதுதான்: வெளியான அறிவிப்பு
அடுத்த வாரம் முதல் வெளிநாடு செல்லும் பிரித்தானியர்களுக்கு தடுப்பூசி கடவுச்சீட்டாக NHS செயலியை பயன்படுத்தலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான தடையானது மே 17 உடன் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில், இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்ட பிரித்தானியர்களுக்கு வெளிநாடு செல்ல தடை இருக்காது என்றே நம்பப்படுகிறது.
இரண்டு டோஸ் தடுப்பூசியும் எடுத்துக் கொண்ட பிரித்தானியர்கள் இனி, வெளிநாடு செல்ல, தடுப்பூசி கடவுச்சீட்டாக NHS செயலியை பயன்படுத்தலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் NHS செயலியை பயன்படுத்தும் வகையிலான ஸ்மார்ட்போன் இல்லாத பிரித்தானியர்கள் 119 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு, தடுப்பூசி தொடர்பான அவர்களின் அத்தாட்சியை கடிதமாக பெற்றுக்கொள்ளலாம்.
குறித்த NHS செயலியில், தடுப்பூசி எடுத்துக்கொண்டதற்கான முழு தகவலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல் டோஸ் எடுத்துக்கொண்ட திகதி, இரண்டாவது டோஸ் எப்போது எடுத்துக்கொண்டார்கள் என மொத்த தகவலும் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், பிரித்தானியர்கள் குறித்த செயலியை தரவிறக்கம் செய்து, கண்டிப்பாக பதிவு செய்து கொள்வதுடன், வெளிநாடு செல்வதற்கும் 2 வாரங்கள் முன்னரே, NHS செயலி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் முடித்துக்கொள்ளவும் கோரப்பட்டுள்ளனர்.
மேலும், கடிதம் வாயிலாக தடுப்பூசி கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள், இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்ட 5 நாட்களுக்கு பின்னர் 119 இலக்கத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
இதனையடுத்து 5 நாட்களுக்கு பிறகு தடுப்பூசி கடவுச்சீட்டானது தபாலில் கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. அரசாங்க இணைய பக்கத்திலும் இதையே தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
உங்கள் தடுப்பூசி தொடர்பான தகவல்களையே வெளிநாடு செல்ல தடுப்பூசி கடவுச்சீட்டாக பயன்படுத்தலாம் எனவும்,
மட்டுமின்றி, இதே NHS செயலியை பயன்படுத்தி இனி பிரித்தானியர்கள் இரவு விடுதி மற்றும் பொதுக்கூட்டங்களிலும் அச்சமின்றி கலந்துகொள்ளலாம்.