பச்சை ஆப்பிளா? சிவப்பு ஆப்பிளா? சர்க்கரை நோயாளிகள் எந்த ஆப்பிளை சாப்பிட வேண்டும்?
நாம் உண்ணும் ஆப்பிள் பழங்களில் நிறைய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்களும் ஆப்பிளில் அடங்கியுள்ளது.
தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் இதயம், மூளை, இரைப்பை, குடல், எலும்புகள், கண்களில் ஏற்பட்ட பல நோய்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
தினமும் ஆப்பிள் சாப்பிட சொல்லியும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். பழங்களை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால் நோய்நொடியிலிருந்து தப்பித்து ஆரோக்கியமான வாழ்க்கையை நாம் வாழலாம். ஆப்பிளில் இரண்டு வகை உள்ளது. ஒன்று சிவப்பு ஆப்பிள், இன்னொன்று பச்சை ஆப்பிள்.
யாரெல்லாம் எந்த ஆப்பிளை சாப்பிடலாம் என்று பார்ப்போம் -
1. இரண்டு ஆப்பிளிலும் புரதம், வைட்டமின், தாதுப்பொருட்கள் அடங்கியுள்ளன.
2. சர்க்கரை நோயாளிகள் சிவப்பு ஆப்பிளை விட, பச்சை ஆப்பிளை தாராளமாக சாப்பிடலாம். ஏனென்றால், சிவப்பு ஆப்பிளை விட, பச்சை ஆப்பிளில் சர்க்கரை அளவு குறைவு. ஆதலால் சர்க்கரை நோயாளிகள் பச்சை ஆப்பிளை சாப்பிடலாம்.
3. சிலருக்கு ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உடலில் அதிகரிக்க வேண்டும் என்றால் பச்சை ஆப்பிளை விட சிவப்பு ஆப்பிளை அவர்கள் சாப்பிடலாம்.
4. ஆஸ்துமா பிரச்சினை இருப்பவர்கள் சிவப்பு ஆப்பிளை விட பச்சை ஆப்பிளை சாப்பிடலாம். ஏனென்றால், பச்சை ஆப்பிளிலில் ஃப்ளாவனாய்டுகள் அதிகம் உள்ளதால் இவை நுரையீரலை பலப்படுத்தும். ஆஸ்துமாவிலிருந்து குணப்படுத்தும்.
5. செரிமானப் பிரச்சினை இருப்பவர்கள் இரண்டு ஆப்பிளையுமே சாப்பிடலாம். இரண்டு ஆப்பிளிலிலும் ஊட்டச்சத்து அதிகமாக உள்ளதால் இவை செரிமான சக்தியை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சினையை குணப்படுத்தும்.
6. ஒருவருக்கு கால்சியம் சத்து அதிகமாக வேண்டும் என்றால், அவர்கள் சிவப்பு ஆப்பிளை விட பச்சை ஆப்பிளை சாப்பிடலாம்.
7. சிலருக்கு உடல்எடையை குறைக்க வேண்டும் என்றால் தாராளமாக அவர்கள் பச்சை ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |