இந்தியாவில் முதல் கல்வி மையத்தை தொடங்கிய Apple
பிரபல தொழில்நுட்ப நிறுவனமான Apple, இந்தியாவில் தனது முதல் Education Hub-ஐ பெங்களூருவில் தொடங்கியுள்ளது.
இது உலகளவில் அமெரிக்கா, வியட்நாம், சீனா ஆகியவற்றுக்குப் பிறகு அமைக்கப்பட்ட நான்காவது கல்வி மையமாகும்.
இந்த கல்வி மையம், Manipal Academy of Higher Education (MAHE)-இன் ஒத்துழைப்புடன் செயல்படுகிறது.
மார்ச் மாதம் முதல், இந்தியாவில் உள்ள 25-க்கும் மேற்பட்ட Apple சப்ளையர் நிறுவனங்களின் பணியாளர்களுக்கு புதிய பாடத்திட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

முதலில் Tata Electronics நிறுவன பணியாளர்களுக்காக, டிஜிட்டல் கல்வி, Swift coding, Robotics, Automation Technology, Smart Manufacturing போன்ற துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
Apple-ன் துணைத் தலைவர் Sarah Chandler, “இந்த உயர் தொழில்நுட்ப பயிற்சிகள் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவும்” என தெரிவித்துள்ளார்.
Apple ஏற்கனவே இந்தியாவில் ஆயிரக்கணக்கான பணியாளர்களுக்கு Leadership Development, Soft Skills போன்ற பயிற்சிகளை வழங்கி வந்துள்ளது. இப்போது, பெங்களூரு கல்வி மையம் மூலம், ‘Train-the-Trainer’ முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதில் MAHE-யின் பேராசிரியர்கள், சப்ளையர் நிறுவனங்களின் பயிற்சியாளர்களுக்கு பாடங்களை கற்பித்து, அவர்கள் தங்கள் நிறுவனங்களில் பெரிய அளவில் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்குவார்கள்.
இந்த முயற்சி, Apple-ன் 50 மில்லியன் டொலர் Supplier Employee Development Fund மூலம் ஆதரிக்கப்படுகிறது. தற்போது Apple மற்றும் அதன் கூட்டாளிகள், இந்தியாவில் 75-க்கும் மேற்பட்ட பாடத்திட்டங்களை வழங்குகின்றனர். 2024 டிசம்பரில் தொடங்கிய Robotics Training Programme வெற்றிகரமாக நடந்ததால், அதை மேலும் பல இடங்களில் விரிவுபடுத்த Apple திட்டமிட்டுள்ளது.
இந்த கல்வி மையம், இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக முன்னேற்றும் முயற்சியில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |