வீட்டிற்கே வந்து பயணிகளை ஏற்றி செல்லும் அரசு பேருந்து - ஆந்திராவில் திட்டம்
apsrtc plan doorstep bus pickup in vijayawada: அரசு பேருந்து மூலம் வீட்டிற்கே வந்து பயணிகளை ஏற்றி செல்லும் திட்டத்தை அறிமுகப்பட்ட ஆந்திராவின் APSRTC முன்வந்துள்ளது.
வீட்டிற்கே வந்து பயணிகளை ஏற்றி செல்லும் அரசு பேருந்து
பொதுமக்களின் பயணங்களை எளிதாக்கும் வகையில் அரசு சார்பில் பெரும்பாலும் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து இயக்கப்படுகிறது.
ஆனால், பேருந்தில் பயணம் செய்வதற்கு நாம் குறிப்பிட்ட பேருந்து நிலையம் அல்லது பேருந்து நிறுத்தம் சென்றுதான் பேருந்தில் ஏற வேண்டி இருக்கும்.

பொதுவாக குடும்பத்துடன் வெளியூர்களுக்கு செல்லும் போது அதிகப் பயணப் பொருட்களுடன் பேருந்து நிலையத்திற்கு பயணிகளுக்கு சிரமமாக இருக்கும்.
இந்த சிரமத்தை கருத்தில் கொண்டு, பயணிகளின் வீட்டு வாசலுக்கு வந்து பேருந்தை ஏற்றி செல்லும் திட்டம் ஆந்திராவில் தொடங்கப்பட உள்ளது.
ஆந்திராவின் அரசு போக்குவரத்து கழகமான APSRTCயின், சூப்பர் சொகுசு, ஏசி மற்றும் ஸ்லீப்பர் பேருந்துகள் தொலைதூர இடங்களுக்குச் சேவை வழங்குகின்றன.
இதில், தொலைதூர பயணம் மேற்கொள்ள, 10க்கும் மேற்பட்ட டிக்கெட்களை மொத்தமாக முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு வீட்டிற்கே பேருந்தை அனுப்பி ஏற்றி வர APSRTC முன்வந்துள்ளது.
மொத்தமாக முன்பதிவு செய்யும் பயணிகள் இது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்.
முதற்கட்டமாக இந்த சேவை, சோதனை முறையில் விஜயவாடா நகரத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |