ராணியின் மரணத்தைத் தொடர்ந்து ஹரி-மேகனின் குழந்தைகள் அரச பட்டங்களை பெறுவார்கள்! எப்படி தெரியுமா?

Queen Elizabeth II Prince Harry Meghan Markle
By Ragavan Sep 09, 2022 10:11 AM GMT
Report

ராணியின் மரணத்தைத் தொடர்ந்து, இளவரசர் ஹரி மற்றும் மேகனின் குழந்தைகள் இளவரசர் மற்றும் இளவரசி என்ற பட்டங்களைப் பெறுவார்கள்.

அரச குடும்பம் அதன் பாரம்பரியத்தை பின்பற்றினால் இது நடக்கும் என கூறப்படுகிறது.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து, அரச குடும்பம் பாரம்பரியத்தை பின்பற்றினால், இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலின் குழந்தைகள் ஆர்ச்சி இளவரசராகவும், லிலிபெட் இளவரசியாகவும் ஆவார்கள் என கூறப்படுகிறது.

பிரிட்டிஷ் வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத், செப்டம்பர் 8-ஆம் திகதி தனது 96 வயதில் பால்மோரலில் காலமானார். அவர் தனது ஸ்காட்டிஷ் தோட்டத்தில் அமைதியாக இறந்த பிறகு, அவரது மூத்த மகன் சார்லஸ் மன்னராக பதவியேற்றார்.

ராணியின் மரணத்தைத் தொடர்ந்து ஹரி-மேகனின் குழந்தைகள் அரச பட்டங்களை பெறுவார்கள்! எப்படி தெரியுமா? | Archie Llibet Become Prince Princess Queen Demise

அரச பாரம்பரியப்படி..,

ராணி எலிசபெத் II இறந்துவிட்டார் என்பதால், அரச குடும்பம் பாரம்பரியத்தை பின்பற்றுமானால், இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்கலின் குழந்தைகள் இளவரசர் மற்றும் இளவரசி என்ற பட்டங்களை வாரிசு என்றமுறையில் தானாகவே பெறுவார்கள்.

சசெக்ஸின் டியூக் மற்றும் டச்சஸின் மகனான Archie Mountbatten-Windsor, இப்போது ஒரு இளவரசன். அதேபோல், அவரது தங்கை Lilibet "Lili" Mountbatten-Windsor, இளவரசி என்ற பட்டத்திற்கான உரிமை உள்ளது.

ஆனால், ஒருமுறை ஆர்ச்சிக்கு அவரது இனம் காரணமாக இளவரசர் பட்டம் மறுக்கப்பட்டது என்று மேகன் குற்றம் சாட்டினார்.

ராணியின் மரணத்தைத் தொடர்ந்து ஹரி-மேகனின் குழந்தைகள் அரச பட்டங்களை பெறுவார்கள்! எப்படி தெரியுமா? | Archie Llibet Become Prince Princess Queen Demise

ஓப்ரா வின்ஃப்ரே உடனான ஹரி-மேகன் நேர்காணலில்..,

மேகன் கடந்த ஆண்டு ஓப்ரா வின்ஃப்ரே உடனான நேர்காணலில், ஆர்ச்சிக்கு பட்டம் இல்லாததால் அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு இருக்காது என்றும், அவரது கலப்பு இனம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அறிந்து அதிர்ச்சியடைந்ததாக வெளிப்படுத்தினார்.

அந்த நேர்காணலில், ஹரி மற்றும் மேகன் இருவரும், இளவரசர் சார்லஸ் அரியணையில் ஏறிய பிறகு ஆர்ச்சிக்கு இளவரசர் பட்டம் வழங்கப்படும் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் நெறிமுறைகள் மாற்றப்படும் என்று கூறப்பட்டது என்று தெரிவித்தனர்.

இளவரசர் சார்லஸின் விருப்பத்திற்கு ஏற்ப, ஆர்ச்சி HRH மற்றும் இளவரசன் ஆக தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டதாக ஆவார்கள் கூறியிருந்தனர்.

ராணியின் மரணத்தைத் தொடர்ந்து ஹரி-மேகனின் குழந்தைகள் அரச பட்டங்களை பெறுவார்கள்! எப்படி தெரியுமா? | Archie Llibet Become Prince Princess Queen Demise

அரச குடும்பத்தின் சந்ததியினர் மற்றும் பேரக்குழந்தைகள் பட்டங்களுக்கு தானாக உரிமை உண்டு

1917-ஆம் ஆண்டு கிங் ஜார்ஜ் V அமைத்த விதிமுறைகளின்படி, அரச குடும்பத்தின் சந்ததியினர் மற்றும் பேரக்குழந்தைகள் HRH மற்றும் இளவரசர் அல்லது இளவரசி என்ற பட்டங்களுக்கு தானாகவே உரிமையைப் (automatic right) பெற்றுள்ளனர்.

ஆனால், ஆர்ச்சி ராணியின் கொள்ளுப் பேரப்பிள்ளை, பேரக்குழந்தை அல்ல. இருப்பினும், இளவரசராகவோ அல்லது இளவரசியாகவோ மாறுவதைத் தடுக்க, இளவரசராக இருப்பதற்கான ஆர்ச்சியின் உரிமையையும், இளவரசியாக இருப்பதற்கான லில்லியின் உரிமையையும் திருத்தியமைக்கும் கடிதங்களுக்கான காப்புரிமையை மன்னர் வெளியிட வேண்டும்.

நேரகானலில், தனது மகன் இளவரசராக இருப்பது முக்கியமா என்ற வின்ஃப்ரே கேள்விக்கு பதிலளித்த மேகன், அதனால் "அவர் பாதுகாப்பாக இருக்கப் போகிறார் என்று அர்த்தம் இருந்தால், நிச்சயமாக" அது முக்கியம் என்று மேகன் கூறினார்.

அரச குடும்பத்தின் கூட்டுக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தானாக பொலிஸ் பாதுகாப்புக்கு உரிமை பெறுவதில்லை என்ற உண்மையின் வெளிச்சத்தில் இவ்வாறு கூறப்பட்டது.

ஜார்ஜ் V-ன் பிரகடனத்தின்படி, வேல்ஸ் இளவரசரின் மூத்த மகனின் மூத்த மகனான இளவரசர் ஜார்ஜ் மட்டுமே, அரியணைக்கு நேரடியான வரிசையில் மன்னரின் கொள்ளுப் பேரனாக இளவரசராக இருக்க உரிமை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US