கொலம்பியாவை ஊதி தள்ளி கோபா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அர்ஜென்டினா! கோப்பையை தூக்குவாரா மெஸ்ஸி?
கோபா அமெரிக்க கால்பந்து தொடரின் அரை இறுதிப்போட்டியில் கொலம்பியாவை வீழ்த்தி மெஸ்ஸியின் அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.
கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் நடந்த முதல் அரையிறுதிப்போட்டியில் பெருவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பிரேசில்.
இந்நிலையில், இன்று நடந்த இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் கொலம்பியா-அர்ஜென்டினா அணிகள் மோதின.
90 நிமிடங்கள் முடிவில் போட்டி 1-1 என சமனில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் பெனாலட்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதில், 3-2 என்ற கோல் கணக்கில் கொல்ம்பியாவை வீழ்த்தி அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.
ஜூலை 11ம் திகதி நடக்கும் இறுதிப்போட்டியில் பிரேசில்-அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.
இதுவரை கோபா அமெரிக்க தொடரில் அதிகபட்சமாக உருகுவே அணி 15 முறை கோப்பையை வென்றுள்ளது. உருகுவேவை தொடர்ந்து அர்ஜென்டினா 14 முறையும், பிரேசில் 9 முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
அர்ஜென்டினா கடைசியாக 1993 ஆம் ஆண்டு கோபா அமெரிக்க சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பிரேசில் 2019 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஜூலை 11ம் திகதி நடக்கும் இறுதிப்போட்டியில் பிரேசில் அணியை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா வென்றால், கோபா அமெரிக்க சாம்பியன் பட்டத்தை அதிக முறை கைப்பற்றி நாடுகள் பட்டியில் உருகுவேவை அர்ஜென்டினா சமன் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.