அர்ஜென்டினாவை நீக்க எழுந்த கோரிக்கை..திடீர் ஓய்வை அறிவித்த நட்சத்திர வீரர்
அர்ஜென்டினாவின் Defender வீரர் நிக்கோலஸ் ஒடாமெண்டி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நிக்கோலஸ் ஒடாமெண்டி
அர்ஜென்டினா கால்பந்து அணிக்காக 139 போட்டிகளில் விளையாடிய Defender வீரர் நிக்கோலஸ் ஒடாமெண்டி (Nicholas Otamendi).
38 வயதாகும் இவர் 2009ஆம் ஆண்டு முதல் அர்ஜென்டினா அணிக்காக விளையாடி வருகிறார்.
FIFA 2026 உலகக்கிண்ணத் தொடரிலும் இவர் விளையாடியிருக்கிறார். தற்போது ஒடாமெண்டி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
தலைநிமிர்ந்து விடைபெறுகிறேன்
இதுகுறித்த அவரது பதிவில், "இன்று என் தொழில் வாழ்க்கையின் மிகவும் கடினமான வார்த்தைகளை நான் எழுத வேண்டியுள்ளது. விதிவசத்தால் எனது கடைசிப் போட்டி ஒரு உலகக்கிண்ண இறுதிப் போட்டியாக அமைந்தது. இது நாங்கள் விரும்பிய முடிவு அல்ல.
ஆனாலும், இந்த அணி கடைசி நொடி வரை தங்களால் இயன்ற அனைத்தையும் கொடுத்தது என்பதை அறிந்து, நான் தலைநிமிர்ந்து விடைபெறுகிறேன். உலக சாம்பியன் ஆகும் கனவை நிறைவேற்ற எனக்கு வாய்ப்பளித்த அர்ஜென்டினாவுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டினா அணியை உலகக்கிண்ணத்தில் இருந்து வெளியேற்ற ஆதரவு பெருகி வரும் சூழலில், நட்சத்திர வீரரான ஒடாமெண்டியின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |