அதிர்ச்சி சம்பவம்.. திடீரென்று இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளித்த ஏரிகள்! குழப்பத்தில் ஆய்வாளர்கள்..
அர்ஜெண்டினாவில் உள்ள இரண்டு ஏரிகள் திடீரென்று இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய நிகழ்வு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காற்று மற்றும் தண்ணீர் மாசு அடைவதால் பல இடங்களின் இயற்கை அழகு பறிபோகின்றது. இதற்கு ஒரு சான்றாய் அர்ஜெண்டினாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்கா நாடான அர்ஜெண்டினாவில் இரண்டு பழமையான ஏரிகள் அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த ஏரிகள் திடீரென்று இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு என்ன காரணம் என்று உறுதியாக தெரியாமல் ஆய்வாளர்கள் உட்பட அனைவரும் குழப்பத்தில் இருந்தனர்.
இந்நிலையில் ஏரிக்கு அருகே உள்ள தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய கழிவுகள் நேராக தண்ணீர் கலந்ததால் நிறம் மாறியிருக்கலாம் என்று பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.