ரஞ்சியில் பெரிய மைல்கல்லை எட்டிய அர்ஜுன் டெண்டுல்கர்
கோவா அணிக்காக ரஞ்சி தொடரில் விளையாடி வரும் அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு பெரிய மைல்கல்லை எட்டினார்.
அர்ஜுன் டெண்டுல்கர்
வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் வீரரான அர்ஜுன் டெண்டுல்கர் கோவா அணிக்காக ரஞ்சிக் கிண்ணத் தொடரில் விளையாடி வருகிறார்.
மகாராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் வீழ்த்தியதன் மூலம், முதல் தர கிரிக்கெட்டில் 50 விக்கெட்கள் மைல்கல்லை எட்டினார்.
அவரது 50 விக்கெட்டுகளில், 13 விக்கெட்டுகள் நடப்பு ரஞ்சிக் கிண்ணத் தொடரில் எடுக்கப்பட்டவை ஆகும்.
அர்ஜுனின் தந்தையான சச்சின் டெண்டுல்கர் 71 முதல் தர விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். எனினும், அர்ஜுன் டெண்டுல்கர் உள்நாட்டு கிரிக்கெட்டில் தனக்கென ஒரு தனிப்பாதையை உருவாக்கியுள்ளார்.
அறிமுகப் போட்டியிலேயே
மும்பையில் தனது ஆரம்ப காலங்களில் இருந்து, கோவா அணிக்கான ஒரு முக்கிய பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக உருவெடுத்துள்ளார்.
கோவா அணிக்காக களமிறங்கிய அறிமுகப் போட்டியிலேயே, ராஜஸ்தான் அணிக்கு எதிராக அர்ஜுன் டெண்டுல்கர் சதம் விளாசினார்.
2026 சீசனுக்கான ஏலத்திற்கு முன்னதாக, அர்ஜுன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாற்றப்பட்டார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |