ஆப்கனிலிருந்து மீட்கப்பட்டவரை ஆயுதங்களுடன் சுற்றி வளைத்த பிரித்தானிய பொலிசார்... பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி
ஆப்கனிலிருந்து மீட்கப்பட்ட ஒருவரை, தாலிபான் தீவிரவாதி என்ற சந்தேகத்தின் பேரில் ஆயுதம் தாங்கிய பிரித்தானிய பொலிசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ள சம்பவம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து பிரித்தானிய விமானப்படையால் மீட்கப்பட்ட ஆப்கன் குடும்பங்கள் சில மான்செஸ்டரிலுள்ள பார்க் இன் ஹொட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் பிரித்தானியாவின் கொரோனா சிவப்புப் பட்டியலில் உள்ளதால், அந்நாட்டவர்கள் தனிமைப்படுத்தப்படவேண்டும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அப்படியிருக்கும் நிலையில், அதிகாலை 4 மணியளவில் அந்த ஹொட்டலுக்குள் ஆயுதம் தாங்கிய பிரித்தானிய பொலிசார் திபுதிபுவென நுழைந்துள்ளனர். அறை ஒன்றில் தன் மனைவி பிள்ளைகளுடன் தூங்கிக்கொண்டிருந்த ஒருவரை சுற்றி வளைத்த பொலிசார், அவரை கைது செய்ததுடன், அவரது லாப் டாப், பாஸ்போர்ட், மொபைல் முதலான சில விடயங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
அப்படியிருக்கும் நிலையில், அதிகாலை 4 மணியளவில் அந்த ஹொட்டலுக்குள் ஆயுதம் தாங்கிய பிரித்தானிய பொலிசார் திபுதிபுவென நுழைந்துள்ளனர். அறை ஒன்றில் தன் மனைவி பிள்ளைகளுடன் தூங்கிக்கொண்டிருந்த ஒருவரை சுற்றி வளைத்த பொலிசார், அவரை கைது செய்ததுடன், அவரது லாப் டாப், பாஸ்போர்ட், மொபைல் முதலான சில விடயங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
ஆனால், பின்னர் அந்த 33 வயது நபர் ஒரு தாலிபான் தீவிரவாதி என சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டவரான இந்த நபர், பிரித்தானிய படையுடன் இணைந்து ஆப்கன் படையின் உளவுப்பிரிவில் வேலை பார்த்துக்கொண்டே தாலிபான்களுக்கு உளவு பார்த்தாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவர் வேலை செய்த இடத்தில் வெடிபொருட்களும், பெரும் தொகையான பணமும் காணாமல் போனதால், அதை அவர் தாலிபான்களுக்கு கொடுத்திருக்கலாம் என்பது தொடர்பாக அவர் ஏற்கனவே விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டவரான இந்த நபர், பிரித்தானிய படையுடன் இணைந்து ஆப்கன் படையின் உளவுப்பிரிவில் வேலை பார்த்துக்கொண்டே தாலிபான்களுக்கு உளவு பார்த்தாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவர் வேலை செய்த இடத்தில் வெடிபொருட்களும், பெரும் தொகையான பணமும் காணாமல் போனதால், அதை அவர் தாலிபான்களுக்கு கொடுத்திருக்கலாம் என்பது தொடர்பாக அவர் ஏற்கனவே விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
தற்போது இந்த நபர் தென் கிழக்கு லண்டனிலுள்ள உச்சகட்ட பாதுகாப்பு கொண்ட சிறை ஒன்றில் அடைக்கப்பட்டுள்ளார். அதிகாரிகள் அவரை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்து வருகிறார்கள்.