பேரறிவாளன் பரோலில் விடப்பட்டுள்ள நிலையில் தமிழக முதல்வருடன் அற்புதம்மாள் சந்திப்பு! இருவரும் பேசியது என்ன?
சென்னை தலைமை செயலகத்தில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சற்றுமுன்னர் சந்தித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுவிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றனர்.
அதிலும் பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் தொடர்ந்து இது தொடர்பில் வலியுறுத்தி வருகிறார்.
பேரறிவாளன் தற்போது தமிழக அரசின் உத்தரவின்படி பரோலில் வெளியில் விடப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை அற்புதம்மாள் தலைமை செயலகத்தில் இன்று சந்தித்துள்ளார்.
இதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மகனுக்கு மருத்துவமே இப்போதுதான் தொடங்கியிருக்கிறோம். தொடர்ந்து சிகிச்சையளிக்க பரோலை நீட்டிக்க வேண்டும் என முதல்வரிடம் கேட்டுள்ளேன்.
நோய் எதிர்ப்பு சக்தி பேரறிவாளனுக்கு குறைவாக இருப்பதால் வைத்தியம் பார்க்க பரோலை நீட்டிக்க கோரினேன்.
என்ன முடியுமோ அதனை நிச்சயம் செய்வேன், நீங்கள் என்ன உணர்வோடு இருக்கிறீர்களோ அதே உணர்வடோடு நானும் இருக்கிறேன் என முதலமைச்சர் சொன்னார் என கூறியுள்ளார்.