இந்தியாவுடனான தோல்விக்கு பின் மைதானத்திலேயே இலங்கை கேப்டனிடம் கொந்தளித்த பயிற்சியாளர்! வெளியான வீடியோ
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் சர்வதேச வர்ணனையாளர் ரஸ்ஸல் அர்னால்டின் விமர்சனத்திற்கு பதிலளித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற 2 வது ஒருநாள் போட்டியில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது.
தோல்விக்குப் பின்னர் மைதானத்திலே இலங்கை கேப்டன் தசுன் ஷானகாவுடன் பயிற்சியாளர் ஆர்தர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
பயிற்சியாளருக்கும் கேப்டனுக்கும் இடையிலான அந்த உரையாடல் களத்தில் நடந்திருக்கக்கூடாது, உடை மாற்றும் அறையில் நடந்திருக்க வேண்டும் என்று ரஸ்ஸல் ட்விட்டரில் விமர்சித்தார்.
Micky Arthur's coaching career is over. This is Not because of India's victory. But Becoz of his bad behaviour at Stadium after lose. #INDvSL
— Pradeep Krishnan (@pradeep_reports) July 20, 2021
He argued with Captain at field pic.twitter.com/qmUFHidyla
அர்னால்டு ட்விட்டுக்கு பதிலளித்த பயிற்சியாளர் ஆர்தர், ரஸ்ஸல், நாங்கள் ஒன்றாக வென்று ஒன்றாக தோற்றோம், ஆனால் நாங்கள் எப்போதும் அதிலிருந்து கற்றுக்கொள்கிறோம்!
தாசுனும் நானும் ஒரு அணியாக வளர்த்து வருகிறோம், நாங்கள் இருவரும் மிகவும் விரக்தியடைந்தோம், நாங்கள் எல்வை மீறவில்லை.
Russ we win together and lose together but we learn all the time!Dasun and myself are growing a team and we both were very frustrated we did not get over the line!It was actually a very good debate,no need to make mischief out of it!
— Mickey Arthur (@Mickeyarthurcr1) July 20, 2021
இது உண்மையில் ஒரு நல்ல விவாதம், அதை பெரிதுப்படுத்த வேண்டிய அவசியமில்லை என மிக்கி ஆர்தர் கூறியுள்ளார்.