நடுவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஸ்வின்! ஏன் தெரியுமா? வைரலாகும் வீடியோ
நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின், நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி, கான்பூர் மைதானத்தில் கடந்த 25-ஆம் திகதி துவங்கியது.
இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 345 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, அதன் பின் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 296 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, நேற்றைய மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்பிற்கு 14 ஓட்டங்கள் எடுத்து 63 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆடி வருகிறது.
Ashwin argues with umpire Nitin Menon pic.twitter.com/R5qMxyeDi0
— Sunaina Gosh (@Sunainagosh7) November 27, 2021
இந்நிலையில், இப்போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வீசிய ஓவரின் போது, அவர் ஸ்டம்பிற்கு அருகில் வந்து பந்து வீசியதால், நடுவர்களால் அந்த பந்தை பார்க்க முடியவில்லை.
இதனால் நடுவர் ஸ்டம்பிற்கு நேராக வராமல், சற்று ஓரமாக சென்று வீசும் படி கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அஸ்வின் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.