சர்வதேச போட்டிகளில் அஸ்வினுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும்!!
சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட இந்திய அணி வீரர் அஸ்வின் ரவிச்சந்திரனுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் என கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான சயீத் அஜ்மல்.
Cricwick என்ற இணையதளத்துக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், நான் கடந்த 8 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன், விதிமுறைகளை யாரை கேட்டு மாற்றுகிறார்கள் என தெரியவில்லை.
அனைத்து விதிமுறைகளும் என் மீதே விழுந்தது, அந்தக் காலக்கட்டத்தில் அஸ்வின் ஏன் 6 மாதக்காலம் விளையாடாமல் இருந்தார்?
அவருக்கு உதவி செய்து பவுலிங் முறையை மாற்றினர், அதனால் ஐசிசி-யின் தடையிலிருந்து அவர் தப்பினார்.
ஆனால் பாகிஸ்தான் வீரர்களை பற்றி யாருக்கும் கவலையில்லை, பணம் தான் முக்கியம் என தெரிவித்துள்ளார்.
சயீத் அஜ்மலின் பவுலிங் ஆக்ஷன் கிரிக்கெட் விதிமுறைகளுக்கு எதிரானது எனக் கூறி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.