ஷாஹின் அப்ரிடியை ஒரங்கட்டி.. வாசிம் அக்ரமின் சாதனையை முறியடித்த அஸ்வின்!
நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னங்ஸில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதின் மூலம் அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிக்கு இடையேயான முதல் டெஸ்ட் கடந்த நவம்பர் 25ம் திகதி கான்பூரில் தொடங்கியது. டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த இந்திய அணி, சிரேயாஸ் ஐயர் சதம் மூலம் முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
இதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை வினையாடிய நியூசிலாந்து அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் அதிகட்சமாக டாம் லதம் 95 ரன்கள் அடித்தார்.
இந்திய தரப்பில் பந்து வீச்சில் அக்சர் பட்டேல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அஸ்வின் 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
3 விக்கெட்டுகளை கைப்பற்றியதின் மூலம் நடப்பு ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் ஷாஹின் அப்ரிடியை பின்னுக்கு தள்ளி அஸ்வின் முதலிடத்தை பிடித்துள்ளார்.
அஸ்வின் இந்த ஆண்டு மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 41 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பித்தக்கது.
அதே போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் வாசிம் அக்ரமை (414) பின்னுக்கு தள்ளி 415 விக்கெட்டுகளுடன் அஸ்வின் முன்னேறியுள்ளார்.