இந்திய அணி நியூசிலாந்தை வென்றால்... அதற்கு இவர் தான் முக்கிய காரணமாக இருப்பார்! மாண்டி பனேசர் கணிப்பு
நியூசிலாந்து அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா வென்றால், அதற்கு யார் முக்கிய காரணமாக இருப்பார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர் கணித்துள்ளார்.
உலக கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பே, உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டி தான், இந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் வரும் 18-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. பல முன்னணி வீரர்கள், இந்த போட்டியை நியூசிலாந்து தான் வெல்ல வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறி வருகின்றன.
ஏனெனில், இங்கிலாந்து மைதானமும், நியூசிலாந்து மைதானமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும் என்பதால், அப்படி கூறி வருகின்றனர். இதே போன்ற கருத்தைத் தான் இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர் கூறியுள்ளார்.
ஆனால் ஒரு வேளை இந்தியா ஜெயித்தால், அதற்கும் யார் காரணமாக இருப்பார் என்று கூறியுள்ளார். தனியார் ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், காலநிலையும் இங்கிலாந்து அணிக்குச் சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது.
இங்கிலாந்து மைதானங்களும், நியூசிலாந்து மைதானங்களும் கிட்டதட்ட ஒரே மாதிரி இருக்கும். இருப்பினும், அஸ்வின் சிறப்பாகப் பந்துவீசி இடது கை பேட்ஸ்மேன்களாக இருக்கும் ஓபனர்கள் டிவோன் கான்வே, லதாம் ஆகியோரை விரைந்து பெவிலியனுக்கு அனுப்ப வாய்ப்புள்ளது.
நியூசிலாந்து அணியில் டிம் சௌதீ நல்லமுறையில் பந்துவீசி வருவதால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பின்னடைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.