சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது? அஸ்வின் சொன்ன பதில் என்ன தெரியுமா?
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அஸ்வின் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய அணிக்காக கடந்த 2010ம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார்.
இதுவரை 78 டெஸ்ட் போட்டிகள், 111 ஒருநாள் போட்டிகள் மற்றும் 46 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியுடன் சேர்த்து மொத்தம் 410 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்த அஸ்வின், கிரிக்கெட் வீரர்கள் சரியாக விளையாடாத போது பல விமர்சனங்கள் எழும்.
நானும் அந்த விமர்சனங்களை எதிர்கொண்டு இருக்கிறேன், ஆனால் நான் அதைப்பற்றி கவலைப்பட்டது கிடையாது.
என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பேன், ஒருவேளை அப்படி நான் நினைக்காதபோது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விடுவேன் என தெரிவித்துள்ளார்.