கோலியை பற்றி பிசிசிஐ-யிடம் போட்டுக் கொடுத்தாரா அஸ்வின்? கசிந்த முக்கிய தகவல்
கோலியைப் பற்றி பிசிசிஐ-யிடம் யார் புகார் கொடுத்தார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின், விலகுவதாக கோலி அறிவித்தார்.
அதே போன்று இந்த ஐபிஎல் தொடரோடு பெங்களூரு அணிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாக கோலி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதுமட்டுமின்றி உலகக்கோப்பை டி20-க்கான இந்திய அணியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றிருந்தார். நான்கு ஆண்டுகள் டி20 போட்டிகள் விளையாடாத ஒரு வீரர் எப்படி இந்திய அணியில் என்று பலருக்கும் சந்தேகம் எழுந்தது.
டி20 உலகக்கோப்பை தொடர் அறிவிப்புக்கு பின்னர் தான் கோலியும் தன் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார். இதனால் இதற்கும், அஸ்வினுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கலாம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், கோலி இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பே அவரைப் பற்றி பிசிசிஐக்கு புகார் சென்றதாக கூறப்பட்டது.
அதில், கோலி யார் பேச்சையும் கேட்காமல் உள்ளார். பயிற்சியின்போது பயிற்சியாளர்கள் ஏதாவது மாற்றத்தை சொன்னால் கூட என்னை குழப்பாமல் சென்று விடுங்கள் என்று நேரடியாக அவர்களை அசிங்கப்படுத்துவதாகவும், யாருடைய பேச்சையும் கேட்காமல் செயல்படுவதால் அணி தேர்விலும் தவறு ஏற்படுகிறது என்றும் குற்றம் சாட்டி இருந்ததாக தகவல்கள் வெளியாகியது.
இதுவே கோலி கேப்டன் பதவியை விட்டு விலக முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால் யார் அந்த வீரர் என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது அது அஸ்வின் தான் என்று செய்தி வெளியாகியுள்ளது.
கோலியின் செயல்பாட்டால் தனக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போய் விடுமோ என்று தோன்றுவதாகவும், மீண்டும் தான் அணியில் இடம் பெற மாட்டேன் என்ற அச்சமும் இருப்பதாக அவர் கூறியுள்ளதாகவும், தற்போது டெஸ்ட் போட்டியில் அவர் சிறப்பான பார்மில் இருந்தும் இங்கிலாந்து தொடரில் அவரை விளையாட விடாமல் ஒதுக்கிய கோலி மீண்டும் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்க மாட்டார் என்ற ஒரு அச்சத்தினால் பிசிசிஐ-யிடம் அஸ்வின் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.