விக்கெட்களை வீழ்த்த திணறிய தமிழன் அஸ்வின்! சொந்த அணியே கிண்டல் செய்ததால் கடுப்பான ரசிகர்கள்
கவுண்டி கிரிக்கெட்டில் விக்கெட்கள் வீழ்த்த திணறிய அஸ்வினை சொந்த அணியே கிண்டல் செய்தது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14 வரை நடைபெறும்.
இதற்குத் தாயாராகும் விதமாக, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது இங்கிலாந்து உள்ளூர் தொடரான கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடி வருகிறார்.
முதல்நாள் முதல் செஷனில் அஸ்வினுக்கு அதிகளவில் ஓவர்கள் வழங்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தபடி அவரால் ஒரு விக்கெட்டைகூட வீழ்த்த முடியவில்லை.
அப்போது, அஸ்வின் ஃபீல்டிங் செய்யும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்த சர்ரே அணி, “இன்னும் விக்கெட் எடுக்கவில்லை என பதிவிட்டு சிரிக்கும் இமோஜியை இணைத்தது.
இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. சொந்த அணியே இப்படி கலாய்க்கலாமா என பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
பின்னர் அஸ்வின் அந்த இன்னிங்சில் ஒரு விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.