மனைவியின் கோரிக்கை... லண்டன் நபரின் கொடுஞ்செயல்: வெளியான முழு பின்னணி

police investigation london crime pakistan husband
By Arbin Jan 04, 2022 09:07 PM GMT
Report

பிரித்தானிய தலைநகர் லண்டனில் விவாகரத்து கோரிய மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, நாட்டைவிட்டு தப்பிய நபரை 20 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிசார் கைது செய்துள்ளனர்.

தென்மேற்கு லண்டனின் நார்பரி பகுதியில் கடந்த 2001 ஆகஸ்டு மாதம் குறித்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. 61 வயதான Zafar Iqbal என்பவர் தமது மனைவி 38 வயதான Naziat Khan என்பவரை குடியிருப்பில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் ரகசியமாக சொந்த நாடான பாகிஸ்தானுக்கு தப்பியுள்ளார். அங்கே சுமார் 20 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த Zafar Iqbal தம்மை நாடு கடத்தாமல் இருக்க சட்ட போராட்டத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இருப்பினும், நீண்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு 2021 செப்டம்பர் மாதம் Zafar Iqbal பிரித்தானியாவுக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் விமான நிலையத்திலேயே லண்டன் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

மனைவியின் கோரிக்கை... லண்டன் நபரின் கொடுஞ்செயல்: வெளியான முழு பின்னணி | Asked For Divorce Husband Choked Wife

நீதிமன்றத்தில் ஆஜரான Zafar Iqbal தம்மீதான கொலை குற்றத்தை மறுத்துள்ளதாகவே தெரிய வந்துள்ளது. ஆனால் அரசு தரப்பு சட்டத்தரணிகள் Zafar Iqbal மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் இருப்பதாக கூறி, மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதை நிரூபிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

உடற்கூராய்விலும் Naziat Khan கழுத்து நெரிக்கப்பட்டு மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2005ல் அவர் மீது முதல் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தானுடன் குற்றவாளிகள் தொடர்பில் எந்த ஒப்பந்தமும் பிரித்தானியாவுக்கு இல்லை என்பதால் நடவடிக்கைகள் தாமதமானதாக கூறப்படுகிறது.

மனைவியின் கோரிக்கை... லண்டன் நபரின் கொடுஞ்செயல்: வெளியான முழு பின்னணி | Asked For Divorce Husband Choked Wife

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில், 2017ம் ஆண்டு பாகிஸ்தான் நிர்வாகம் Zafar Iqbal என்பவரை விசாரணை நிமித்தம் பிரித்தானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க ஒப்புதல் அளித்தது.

இதனையடுத்து 2021 டெப்டம்பர் 14ம் திகதி லண்டன் திரும்பிய அவரை பொலிசார் விமான நிலையத்திலேயே கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் தொடர் விசாரணை டிசம்பர் 5ம் திகதி முதல் முன்னெடுக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US