ஐவர் கும்பலால் கொடூரமாக சீரழிக்கப்பட்ட சிறுமி: நடுக்கும் சம்பவம்
இந்திய மாநிலம் அசாமில் சிறுமியை 5 பேர் சேர்ந்து சீரழித்த வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இந்தியாவில் சமீப ஆண்டுகளாக பெண்களுக்கு எதிராக பல கொடுமைகள் அரங்கேறி வருகின்றது. இந்நிலையில் 5 இளைஞர்கள் சிறுமியை ரூமுக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ள வீடியோ இணையத்தில் பரவி வருகின்றது.
சிறுமியின் ஆடையை கழட்ட சொல்லி கன்னத்தில் பளார் பளார் என இரண்டு முறை அறைந்து கொடுமைப்படுத்தியத்தோடு துஸ்பிரயோகமும் செய்துள்ளனர்.
இச்சம்பவம் அசாம் மாநிலத்தில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த சிறுமி யார்? மற்றும் 5 இளைஞர்கள் குறித்து எந்த தகவலும் கிடைத்தபாடில்லை.
இதனால் சிறுமியை கொடுமைப்படுத்தும் இளைஞர்களின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டு பொதுமக்கள் உதவி கேட்டு விளம்பரப்படுத்தியுள்ளனர்.
இதை அசாம் காவல்துறை ட்வீட்டர் பக்கத்திலேயே வெளியிட்டுள்ளனர். அந்த வைரல் வீடியோவில் குற்றவாளிகள் பெண்ணை கொடூரமாக சித்திரவதை செய்வதையும் எல்லைமீறி நடப்பதையும் காண முடிகிறது.