ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டபின் பெண்ணுக்கு நேரிட்ட பயங்கரம்: கால்களை இழக்க நேருமோ என அச்சம்
பிரித்தானிய பெண் ஒருவர் ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டபின், அவரது கால்களில் பயங்கர இரத்தக்கொப்புளங்கள் உருவாகியுள்ளன. இதனால் கால்களை இழக்க நேருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது அவருக்கு.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ என்ற இடத்தைச் சேர்ந்த Sarah Beuckmann (34) என்ற பெண். ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டதும், முதலில் Sarahவுக்கு ப்ளூ காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உருவாகியுள்ளன.
தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு, அது சாதாரணமான ஒரு பக்க விளைவுதான், ஆனால் ஒரு வாரம் சென்றதும் Sarahவின் கால்களில் ஊசி குத்துவது போன்ற உணர்வு உருவாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து அவரது கணுக்கால் பகுதியில் சிவப்புப் புள்ளிகள் உருவாகியுள்ளன. மருத்துவரை பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் பெற்றுள்ளார் Sarah, ஆனால், அதற்குள் அவரது காலில் இருந்த சிவப்புப் புள்ளிகள், கொப்புளங்களாக மாறத்துவங்கியுள்ளன.
உடனடியாக Sarah மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் தனது கால்கள் இருந்த நிலையைக் கண்டு, கால்களை இழக்க நேருமோ என்ற அச்சம் Sarahவுக்கு உருவாகியுள்ளது.
16 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்திருக்கிறார் Sarah. முதலில் கால்களில் தோன்றிய கொப்புளங்கள், பிறகு கைகள், முகம் மற்றும் உட்காரும் இடம் வரை பரவியிருக்கிறது.
மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில்தான் வலம் வருகிறார் Sarah. மருத்துவர்களைப் பொருத்தவரை, பாவம் அந்த பெண், அவருக்கு மிக அபூர்வமான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது போல் இருக்கிறது என்று கூறிவிட்டு அமைதியாகிவிட்டார்கள்.
அந்த பெண் படும் பாடு அவருக்குத்தான் தெரியும். என்றாலும், மக்கள் அச்சப்படவேண்டாம், தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வாருங்கள் என்கிறார் Sarah. ஆனால், Sarahவையே இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டாம் என்று கூறிவிட்டார் அவரது மருத்துவர்!