தன்னை கிண்டல் செய்த இங்கிலாந்து உள்ளூர் அணியை வாயை பிளக்க வைத்த அஸ்வின்! 2-வது இன்னிங்ஸில் நடந்த தரமான சம்பவம்
இங்கிலாந்து உள்ளூர் அணியில் விளையாடி வரும் அஸ்வின் கிண்டலுக்குள்ளான நிலையில், அதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாத நடைபெறவுள்ளது. இதற்கான பயிற்சியாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர், அஸ்வின் அங்கிருக்கும் உள்ளூர் கவுண்டி அணியான சர்ரே அணியுடன் இணைந்து விளையாடி வருகிறார்.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் நடந்த சாமர்செட் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்று விளையாடி வரும் அவர், முதல் இன்னிங்சில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 43 ஓவர்களை வீசி 99 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். இதன் காரணமாக அஸ்வினின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்த சர்ரே அணி அவரது படத்திற்கு கீழ் சிரிக்கும் இமேஜை போட்டு கிண்டலடித்து இருந்தது.
இது ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸில், 15 ஓவர்கள் மட்டுமே வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதன் மூலம் அவர் தன்னை கிண்டல் அடித்தவர்களையே மீண்டும் பெருமையாக பேச வைத்தார்.