இந்த ஆண்டில் ஜேர்மனியில் எக்கச்சக்கமாக அதிகரித்துள்ள புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள்...
இந்த ஆண்டில் ஜேர்மனியில் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் அளித்துள்ளோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
ஜனவரி முதல் ஆகத்து மாதம் வரை மட்டுமே 115,402 பேர் முதன்முறை விண்ணப்பம் அளித்துள்ளார்கள்.
ஜேர்மனியில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது.
ஜனவரி முதல் ஆகத்து மாதம் வரை, ஜேர்மனியில் முதல் முறை புகலிடக்கோரிக்கை விண்ணப்பம் அளித்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 115,402 ஆகும்.
இது முந்தைய ஆண்டை ஒப்பிட்டால் 35.4 சதவிகிதம் அதிகமாகும். சென்ற ஆண்டில் 85,230 பேர் ஜேர்மனியில் புகலிடம் கோரி விண்ணப்பித்திருந்தார்கள்.
பெடரல் புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் அலுவலக புள்ளிவிவரப்படி, ஒரு முறை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு,இரண்டாவது முறை புகலிடக்கோரிக்கை விண்ணப்பம் அளித்தவர்கள் 17,216.
image - Cineberg Ug | Dreamstime.com
அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம் அளித்தவர்கள் சிரியா நாட்டைச் சேர்ந்தவர்கள், அதாவது 35,138 பேர்.
இரண்டாவது அல்லது அடுத்தடுத்த முறை விண்ணப்பம் செய்தவர்களில் அதிகம்பேர் ஆப்கன் நாட்டவர்கள், 3,532 பேர்.
இதுபோக, இந்த காலகட்டத்தில் ஜேர்மனியில் புகலிடம் கோரியவர்களில் ஈராக்கியர்கள் 11,034 பேர், துருக்கி நாட்டவர்கள் 10,60 பேர் மற்றும் ஜார்ஜியா நாட்டவர்கள் 5,154 பேர் ஆவர்.