கதறும் புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரான்சிற்கே சென்று விடுங்கள்: பிரித்தானிய எம்.பியால் வெடித்த சர்ச்சை
மிதக்கும் குடியிருப்புக்கு செல்ல மறுக்கும் புகலிடக்கோரிக்கையாளர்கள் கதறாமல் பிரான்சிற்கே சென்று விடுங்கள் என கன்சர்வேடிவ் கட்சி எம்பி தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கன்சர்வேடிவ் கட்சி துணைத் தலைவர்
குறித்த கருத்துக்கு தாம் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை எனவும், அது தமது ஆதங்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கன்சர்வேடிவ் கட்சி துணைத் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,
@skynews
சந்தேகமே இல்லை, எங்கள் அரசாங்கம், சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்தில் தோல்வியடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். கன்சர்வேடிவ் கட்சி துணைத் தலைவரான லீ ஆண்டர்சன் என்பவரே சர்ச்சையை ஏற்படுத்தும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தியவர்.
திங்களன்று Bibby Stockholm என்ற மிதக்கும் குடியிருப்புக்கு செல்ல, கடைசி நிமிடத்தில் 20 பேர்களுக்கு மீண்டும் கால அவகாசம் அளிக்கப்பட்டதை அடுத்தே லீ ஆண்டர்சன் குறித்த கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
கண்கூடாக பார்த்தவன்
Dorset பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள மிதக்கும் குடியிருப்பில், இனி புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்க வைக்கப்படுவார்கள். அரசாங்கம் இவர்களின் விண்ணப்பத்தை பரிசீலித்து, உரிய முடிவை அறிவிக்கும் வரையில், 3 முதல் 9 மாதங்கள் வரையில் தங்க வைக்கப்படுவார்கள்.
@skynews
லீ ஆண்டர்சன் தெரிவிக்கையில், ஒவ்வொரு முறையும் படகுகள் மூலமாக மக்கள் பிரித்தானியாவுக்குள் நுழைவதும், அவர்களை ஹொட்டல்கள் மற்றும் மிதக்கும் குடியிருப்புகளில் தங்க வைப்பதும் உண்மையில் கோபத்தை ஏற்படுத்துகிறது.
பிரான்சில் அவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது கண்கூடாக பார்த்தவன். இதனால் தான், பிரித்தானியா அளிக்கும் வசதிகளை ஏற்க மறுப்பவர்கள், பிரான்சிற்கே சென்றுவிட வேண்டும் என்றேன் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |