ஜேர்மன் விமானநிலையத்திற்கு அருகே பட்டப்பகலில் நடந்த சம்பவம்! மர்ம நபரின் அதிர்ச்சி செயல்: வலை வீசி தேடி வரும் பொலிசார்
ஜேர்மனியில் விமானநிலையத்திற்கு அருகே மர்ம நபர் ஒருவர் திடீரென்று கத்தி குத்து தாக்குதலில் ஈடுபட்டதால், ஒருவர் காயமடைந்துள்ளார்.
ஜேர்மனியின் Düsseldorf-ல் இருக்கும் பரபரப்புமிகுந்த Düsseldorf சர்வதேச விமானநிலையத்திற்கு வெளியே, உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 12.16 மணிக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் அங்கிருந்த நபர்களை கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்த தகவல் அங்கிருந்த விமான பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பியுள்ளார்.
இது குறித்து பொலிசார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தாக்குதலுக்குள்ளான நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடி வருகிறோம்.
அங்கிருந்த சிசிடிவி கமெராக்களை வைத்து தாக்குதல்தாரியை தேடி வருவதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், குறித்த சம்பவம் காரணமாக விமானநிலையத்தில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை, விமானநிலையம் வழக்கம் போல் மக்கள் வந்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.