குடிபோதையில் பெற்ற மகளிடம் தவறாக நடக்க முயற்சித்த தந்தை! அடித்துக் கொன்ற மனைவி
சென்னையில் சொந்த மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தையை மனைவி சுத்தியலால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
சென்னை - ஓட்டேரி வாழைமா நகர் 9வது தெருவை சேர்ந்தவர் பிரதீப் (43). இவருக்கு திருமணமாகி பிரீத்தா ( வயது 41) என்ற மனைவியும், ஸ்ரீகீர்த்தி(20), கௌதம்(10) என இரு பிள்ளைகள் உள்ளனர்.
குடிபோதைக்கு அடிமையான பிரதீப் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று இரவு 10 மணியளவில் முழு மதுபோதையில் வீட்டிற்கு வந்த பிரதீப் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றிருக்கிறார்.
அதன் பின்னர் நள்ளிரவில் பிரதீப் தனது பெற்ற மகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போது மகள் கீர்த்தியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் பிரீத்தா கணவனை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூற, இதற்கு பிரதீப் மறுப்பு தெரிவித்ததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பிரீத்தா வீட்டில் இருந்த சுத்தியை எடுத்து கணவர் பிரதீப் மண்டையில் அடித்து கொலை செய்துள்ளார். இதில் பிரதீப் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து தகவலிறந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பிரதீப் சடலத்தை கைபற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு பிரீத்தாவை பொலிசார் கைது செய்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட மகள், மகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.