ஜேர்மன் அமைச்சரை கடத்த முயன்ற சம்பவம்: ஆறாவது நபர் மீது குற்றச்சாட்டு பதிவு
ஜேர்மனியின் சுகாதாரத்துறை அமைச்சரை கடத்த முயன்ற சம்பவம் தொடர்பில், ஆறாவதாக ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சரை கடத்த முயன்ற சம்பவம்
கோவிட் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியதற்காக, ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Karl Lauterbachஐ கடத்த சிலர் முயன்ற சம்பவம் ஜேர்மனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட ஐந்து பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்கள். அத்துடன், அரசைக் கவிழ்க்கவும் அவர்கள் திட்டமிட்டதாக அரசு அதிகாரிகள் அவர்கள் மீது குற்றம் சாட்டியிருந்தார்கள்.
மேலும் ஒருவர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக, தற்போது ஆறாவதாக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அந்த 61 வயது நபர் மீது, தீவிரவாத அமைப்பு ஒன்றில் உறுப்பினராக உள்ளதற்காகவும், தேசத்துரோக திட்டம் ஒன்றில் பங்கேற்றதாகவும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவிட் காலகட்டத்தில், அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், அவற்றிற்கு வலது சாரியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவந்தார்கள்.
குறிப்பாக, சுகாதாரத்துரை அமைச்சரான Lauterbach அந்த கட்டுப்பாடுகளுக்கு ஆதரவளித்துவந்ததால், அந்த காலகட்டத்தில் அவர் பலத்த எதிர்ப்பையும் வெறுப்பையும் சம்பாதிக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |