அமெரிக்காவில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து நைஜர் நாட்டில் வன்முறை வெடித்துள்ளதால், அங்கிருக்கும் தங்கள் குடிமக்களை வெளியேற்ற பிரான்ஸ் முதலான நாடுகள் நடவடிக்கை எடுத்துவருகின்றன.
உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தின் தெற்கில் உள்ள துறைமுகம் மற்றும் தொழில்துறை வசதிகள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்சிலிருந்து சிறு படகொன்றில் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக புறப்பட்ட புலம்பெயர்வோரில் சிலர் தண்ணீரில் தூக்கி வீசப்பட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நேற்று முன்தினம் (31) விஸ்வ இந்து பரிஷத்தின் அமைப்பு சார்பில் மத ஊர்வலம் இடம்பெற்றது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை காணவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |