நாட்டின் எல்லைகளை திறக்க உத்தரவிட்ட பிரதமர்: 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்
அவுஸ்திரேலியாவில் பிப்ரவரி 21 முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்து அவுஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரிசன் உத்தரவு அளித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்ததை தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அந்த நாட்டின் எல்லைகளை மூட பிரதமர் ஸ்காட் மோரிசன் உத்தரவிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து 2 ஆண்டுகள் அவுஸ்திரேலியாவின் எல்லைகள் மூடப்பட்டு இருந்தன.கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட எல்லைகளில் இதுவே உலகின் மிக நீண்ட காலம் நீடிக்கப்பட்ட தடை என பார்ககப்படுகிறது.
இந்த நிலையில் இந்த தடையை பிப்ரவரி 21 திகதி முதல் விலகி கொல்வதாக பிரதமர் ஸ்கோவ்ட் மோரிசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள அறிக்கையில், டெல்டா வகை கொரோனாவின் தாக்கம் அவுஸ்திரேலியாவில் அதிகரித்தை தொடர்ந்து நாட்டின் எல்லைகள் மூடப்பட்டன, மேலும் அதன் தொடர்ச்சியாக வந்த ஒமிக்ரைன் பரவல் உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவியதை தொடர்ந்து இந்த தடை மேலும் நீடிக்கப்பட்டது.
தற்போது இந்த கொரோனா பரவல் தாக்கம் குறைந்துள்ளதை முன்னிட்டு வரும் பிப்ரவரி 21 திகதி முதல் அனைத்து வெளிநாடு பயணிகளுக்கும் அவுஸ்திரேலியாவிற்கு வர அனுமதி அளிக்கப்படுகிறது.
ஆனால் அவுஸ்திரேலியாவிற்கு வரும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவ்வாறு அவுஸ்திரேலியாவிற்கு வருகைதரும் வெளிநாடு பயணிகள் தங்களை சில நாள்கள் சுய தனிமையில் ஊட்டப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தி கொள்கிறோம் என தெரிவிக்கபட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் சுற்றுலா துறையை மேம்படுத்துவதே கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், கொரோனாவிற்கு முன்பு நாட்டின் சுற்றுலா துறை வருமானம் 84.9 பில்லியன் டாலராக இருந்தகாகவும் அது இந்த இரண்டு ஆண்டுகள் எல்லைகள் மூடப்பட்டபின் 41% வரை குறைந்து விட்டது.
தற்போது இந்த தடையை விலகுவதால் மூலம் அவுஸ்திரேலியாவில் மீண்டும் சுற்றுலாத்துறை பலமடையும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் ஸ்கோட் மோரிசன் தெரிவித்துள்ளார்.