உடைமாற்றும் அறையில் அதிர்ச்சி! பதறியடித்து ஓடிய பெண்..பகிர்ந்த வீடியோவிற்கு குவிந்த பார்வைகள்
அவுஸ்திரேலியாவில் உடைமாற்றும் அறையில் திரைச்சீலையை, ஆண் ஒருவர் ஆக்ரோஷமாக திறந்ததால் பெண்ணொருவர் அதிர்ச்சியடைந்தார்.
அதிர்ச்சியடைந்த பெண்
மெல்போர்னைச் சேர்ந்த ரீட்டா எனும் பெண்ணொருவர், பிரபல ஆடை நிறுவனமான ஜாராவின் கடை ஒன்றுக்கு சென்றுள்ளார். 
வெஸ்ட்ஃபீல்ட் டான்கேஸ்டரில் அமைந்துள்ள அந்த கடையின் உடைமாற்றும் அறையில் அவர் இருந்துள்ளார்.
அப்போது அந்த அறையின் திரைச்சீலையை ஆண் ஒருவர் கிழித்ததால் பயந்த அவர், உடனடியாக அதனை மூடிவிட்டு விரைவாக ஆடையணிந்து வெளியே வந்துள்ளார்.
மேலும், ஜாரா ஊழியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். முதலில் அவர் ஜாராவின் ஆண் ஊழியரை சந்தேகித்து அவர்தானா என்று கேட்டுள்ளார். ஆனால் அவர் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எச்சரிக்கை
பின்னர் மேல் மட்டத்தில் உள்ள உடை மாற்றும் அறைகளில் 'ஆட்கள் இல்லை' என்றும், 'வாடிக்கையாளர்கள் கீழ் மட்டத்தில் உள்ள உடை மாற்றும் அறைகளைப் பயன்படுத்துவார்கள்' என்றும் மற்றொரு தொழிலாளி கூறியதைக் கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
ரீட்டா தனது டிக்டோக் வீடியோவில் இதுகுறித்து விரக்தியாக பேசியிருந்தார். அதில் நடந்தவற்றை விளக்கமாகக் கூறி பெண்களை கவனமாக இருக்குமாறு எச்சரித்தார். இந்த வீடியோ விரைவாக 645,000க்கும் மேற்பட்ட பார்வைகளைக் கடந்துள்ளது.
மற்றொரு வீடியோவில், சிசிடிவி காட்சிகளை மதிப்பாய்வு செய்த ஜாராவின் அவுஸ்திரேலிய பிரதிநிதி தன்னைத் தொடர்பு கொண்டதாகக் கூறினார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |