கடைசி ஒருநாள் போட்டி: 157 ஓட்டங்களுக்கு சுருண்ட அவுஸ்திரேலியா
பாகிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 157 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
விக்கெட்டுகள் சரிவு
அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, லாகூரின் கடாஃபி மைதானத்தில் நடந்து வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது.
ஷாஹீன் ஷா அப்ரிடி வீசிய ஓவரில், மேத்யூ ஷார்ட் தான் சந்தித்த 2வது பந்திலேயே டக்அவுட் ஆனார்.
அடுத்து மார்னஸ் லபுசாக்னே 19 ஓட்டங்களில் ரன்அவுட் ஆக, ஹாரிஸ் ராஃப் பந்துவீச்சில் அலெக்ஸ் கேரி (19 ஓட்டங்கள்) கிளீன்போல்ட் ஆனார்.
இங்லிஸ் அரைசதம்
அதிரடியாக ஓட்டங்களை சேர்ந்த அணித்தலைவர் ஜோஷ் இங்லிஸ் (Josh Inglis) அரைசதம் அடித்தார். அவர் 65 ஓட்டங்களில் இருந்தபோது ஆட்டமிழக்க, அவுஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிந்தன.

ஷதாப் கான், அப்ரார் அகமதுவின் சுழலில் சிக்கி அவுஸ்திரேலிய அணி 42 ஓவர்களில் 157 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ஷாஹீன் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுகளும், அப்ரார் அகமது மற்றும் ஷதாப் கான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |