திருநங்கையாக மாறிய இந்திய கிரிக்கெட்டரின் மகன் - அவுஸ்திரேலியாவில் விளையாட ஒப்புதல்
trans cricketer anaya bangar to play in australia: திருநங்கையாக மாறிய அனயா பங்கர் கிரிக்கெட்டில் பங்குபெற அவுஸ்திரேலியா ஒப்புதல் வழங்கியுள்ளது.
திருநங்கையாக மாறிய இந்திய கிரிக்கெட்டரின் மகன்
இந்திய கிரிக்கெட் அணியில் 2001-2004 காலகட்டத்தில் விளையாடி வந்தவர் சஞ்சய் பங்கர். ஓய்வுக்கு பிறகு அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டார்.
இவரின் மகனான ஆர்யன், உள்ளூர் போட்டிகளில் மும்பை மற்றும் புதுச்சேரி அணிகளுக்காக விளையாடி வந்தார்.

2023 ஆம் ஆண்டில் தான் பெண்ணாக மாற விரும்புவதாக கூறி, ஹார்மோன் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன் பின்னர் பாலின மாற்று சிகிச்சை செய்து கொண்டு தனது பெயரை அனயா பங்கர்(anaya bangar) என மாற்றிக்கொண்டார்.

அவுஸ்திரேலியா ஒப்புதல்
இவர் திருநங்கையாக மகளிர் கிரிக்கெட்டில் விளையாட பிசிசிஐயிடம் அனுமதி கோரினார். பிசிசிஐ எந்த பதிலும் தராத நிலையில் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அமைப்பை அணுகியுள்ளார். அவுஸ்திரேலியா அனயாவின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆண் பருவமடைதலை அடைந்த திருநங்கை பெண்கள் உயர்மட்ட மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்பதைத் தடுக்கும் விதிமுறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2023 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.

மகளிர் பிக்பாஸ் தொடரில் விளையாட அவர் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அதற்காக ஒப்புதல் தரப்பட்டுள்ளது. உயர்மட்ட கிரிக்கெட்டில் விளையாட டெஸ்ட்ரோஜென் சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
ஐசிசி விதிப்படி உயர்மட்ட கிரிக்கெட்டிற்குத் தகுதிபெற, அவரது இரத்தத்தில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் செறிவு குறைந்தது 12 மாதங்களுக்கு 10 nmol/L-க்குக் குறைவாக இருக்க வேண்டும்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் நேர்மைப் பிரிவுத் தலைவர் ஜாக்கி பார்ட்ரிட்ஜ், "உயர்மட்ட கிரிக்கெட்டில் விளையாடுவது மார்ச் 2027 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த டெஸ்டோஸ்டிரோன் சோதனை முடிவுகளை பொறுத்து உள்ளது.
மார்ச் 2027 வரை, அவுஸ்திரேலியாவின் எந்தவொரு மாநிலம் அல்லது பிராந்தியத்திலும் நடைபெறும் பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தகுதியுடையவராக தொடர்வார்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |