சர்ச்சையில் சிக்கிய ஈரானிய வீராங்கனைகளுக்கு அடைக்கலம்: விசாவை உறுதி செய்த அவுஸ்திரேலியா
ஈரானிய கால்பந்து வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலிய அரசு தற்காலிக விசாவை உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரான் மகளிர் கால்பந்து வீராங்கனைகள்
ஆசியக்கிண்ண கால்பந்து தொடரில் விளையாட, ஈரான் மகளிர் கால்பந்து வீராங்கனைகள் அவுஸ்திரேலியா சென்றனர்.

கடந்த வாரம் நடந்த தென் கொரியா அணிக்கு எதிரான போட்டியின் தொடக்கத்தில், அவர்கள் தங்கள் நாட்டின் தேசிய கீதத்தை பாட மறுத்து தெரிவித்தனர். இதனால் ஈரான் ஊடகங்கள் அவர்களை 'யுத்த கால துரோகிகள்' என்று கூறி கடுமையாக விமர்சித்தன.
பின்னர் நடந்த அடுத்தடுத்தப் போட்டிகளில் ஈரானிய வீராங்கனைகள் தேசிய கீதத்தை பாடினர். ஆனாலும், அவர்களுக்கு சொந்த நாட்டில் அச்சுறுத்தல் இருப்பதாலும், மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிப்பதாலும் அவுஸ்திரேலியாவிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

விசாக்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் வீராங்கனைகளை ஈரானுக்கு அனுப்புவது அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்; அவர்களுக்கு அவுஸ்திரேலியா அடைக்கலம் கொடுக்க வேண்டும். இல்லாவிடில் அமெரிக்கா அவர்களை ஏற்றுக் கொள்ளும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய அரசு ஈரானிய வீராங்கனைகளுக்கு தஞ்சம் அளித்துள்ளது. அத்துடன் அவர்களுக்கு தற்காலிக மனிதாபிமான விசாக்கள் வழங்கப்படும் என்பதை உள்துறை அமைச்சர் டோனி பர்க் (Tony Burke) உறுதிப்படுத்தினார்.
மேலும் அவர், "அரசாங்கத்தின் மௌனம், வீரர்கள் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கான விருப்பத்தை பாதுகாப்பாக வெளிப்படுத்த உதவும் ஒரு நுட்பமான நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இந்த பெண்கள் சிறந்த விளையாட்டு வீராங்கனைகள், சிறந்த மனிதர்கள்; அவர்கள் அவுஸ்திரேலியாவில் வீட்டில் இருப்பது போல் உணர்வார்கள். அவுஸ்திரேலியா ஈரானிய பெண்கள் கால்பந்து அணியை தங்கள் இதயங்களில் ஏற்றுள்ளது" என்று கூறினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |