அவுஸ்திரேலியாவில் தடுப்பூசி போட்டதனால் ஒரே இரவில் கோடீஸ்வரியான இளம் பெண்!
அவுஸ்திரேலியாவில் 25 வயது பெண் தடுப்பூசி போட்டதற்காக லொட்டரியை வென்று மில்லியனர் ஆனார்.
25 வயதான அவுஸ்திரேலியப் பெண் ஜோன் ஜு (Joanne Zhu), மில்லியன் டொலர் வாக்ஸ் லொட்டரியை வென்றதன் மூலம் ஒரே இரவில் கோடீஸ்வரரானார்.
அவுஸ்திரேலியாவில் தடுப்பூசி விகிதங்களை அதிகரிக்க பரோபகாரர்கள் மற்றும் நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது இந்த Million Dollar Vax லொட்டரி. இதில் மில்லியன் கணக்கான அவுஸ்திரேலியர்கள் நுழைந்தனர்.
டெய்லி மெயிலின் அறிக்கையின்படி, அக்டோபர் 31-க்குள், சுமார் 2,744,974 அவுஸ்திரேலியர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைப் பதிவு செய்தனர்.
கடந்த வெள்ளியன்று இந்த லொட்டரியின் அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஜோன் ஜு இதில் வெற்றிபெற்றார்.
ஜோன் ஜு, வெற்றியாளராக தனது பெயர் அழைக்கப்பட்டபோது தான் கேட்டதை தன்னால் நம்ப முடியவில்லை என்று கூறினார்.
அந்த பணத்தில் அவர் தனது குடும்பத்திற்கு பரிசுகளை வாங்குவதாகவும், மீதமுள்ள பணத்தை முதலீடுகளில் வைப்பதாகவும் கூறினார். மேலும், சுற்றுப்பயணம் செய்து தனது நண்பர்களுக்கு ஒரு அழகான விருந்தை கொடுக்க விரும்புவதாக வர கூறினார்
. தொற்றுநோய் காரணமாக குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாக தனது பெற்றோரைப் பார்க்காத ஜு, அவுஸ்திரேலியாவில் எல்லைகள் விரைவில் திறக்கப்படுவதற்கு அனைவறையும் தடுப்பூசி போடவேண்டும் என்ற கோரிக்கையை விருப்பமாக கூறினார்.