இந்திய மாநிலம் ஒன்றிற்கு பனிச்சரிவு எச்சரிக்கை
இந்திய மாநிலம் ஒன்றிற்கு பனிச்சரிவு தொடர்பிலான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய மாநிலம் ஒன்றிற்கு பனிச்சரிவு எச்சரிக்கை
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள சில நகரங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள உத்தர்காஷி, சாமோலி மற்றும் ருத்ரப்ரயாக் ஆகிய நகரங்களுக்கு இரண்டாம் மட்ட எச்சரிக்கையும், பித்தோராகர் மற்றும் பாகேஷ்வர் ஆகிய நகரங்களுக்கு முதல் மட்ட எச்சரிக்கையும் விடுக்கபட்டுள்ளது.
இன்று, அதாவது, திங்கட்கிழமை மாலை 5.00 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும்.
மலையில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் பனிபடர்ந்த இடங்களுக்கு தேவையில்லாமல் செல்லவேண்டாம் என்றும், வானிலை எச்சரிக்கைகளை கவனித்துக்கொள்ளுமாறும், கூரைகள் மீது படியும் பனியை அவ்வப்போது அகற்றுமாறும், அதிக பனிப்பொழிவு உள்ள இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விடயம் என்னவென்றால், ஒரு பக்கம் இமயமலையில் போதுமான பனிபொழிவு இல்லாததால் கவலை உருவாகியிருந்த நிலையில், ஜனவரி மாதம் 23ஆம் திகதி பனிப்பொழிவு துவங்கிய விடயம் பெரும் ஆறுதலை அளித்துள்ளது.
அதேநேரத்தில், பல இடங்களில் பனிப்பொழிவு காரணமாக பனிச்சரிவு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆகவேதான் மக்களுக்கு பனிச்சரிவு தொடர்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |