'இந்தியா பக்கமே போகாதீங்க' மக்களை எச்சரிக்கும் பிரபல நாடு!
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பதைக் காரணம் காட்டி, இந்தியாவுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு அமெரிக்காவின் உயர் மருத்துவ அமைப்பு அதன் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) அந்நாட்டு குடிமக்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவில் COVID வழக்குகள் அதிகரித்துள்ள நிலையில், பயணிகள் இந்தியாவுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்க வேண்டும் என CDC அறிவுறுத்தியுள்ளது.
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் கூட இந்தியாவில் பரவிவரும் 'B.1.617' என அழைக்கப்படும் இரட்டை மரபணு உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்படக் கூடும் அல்லது ஆபத்து ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
"அதையும் மீறி நீங்கள் இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் என்றால், பயணத்திற்கு முன் முழுமையாக தடுப்பூசி போடுங்கள்” என்று சுகாதார அமைப்பு CDC அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக திங்களன்று பிரித்தானிய அரசு இந்தியாவை அதன் 'சிவப்பு பட்டியலில்' சேர்த்து பயணக் கட்டுப்பாடுகளை விதித்து. இங்கிலாந்து அல்லது ஐரிஷ் குடியுரிமை உள்ளவர்களைத் தவிர இந்தியாவில் இருந்து வரும் அனைவருக்கு தடை விதிக்கப்பட்டது.
அதேபோல், ஹொங்ஹொங் அரசு இந்தியாவிலிருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.