உள்ளாடையுடன் தூங்குகிறீர்களா? அப்போ இந்த பிரச்சினை உங்களுக்குத்தான்
ஒருவருக்கு இரவு தூக்கம் என்பது மிக மிக முக்கியம். ஒருவர் ஒருநாளைக்கு சுமார் 7 முதல் 9 மணி நேரம் வரை தூங்கினால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
ஒருவர் சரியாக தூங்கவில்லையென்றால் மன அழுத்தம், சோர்வு, கண் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
மேலும், ஆடைகள் ஏதுமில்லாமல் வெறும் உடம்புடன் தூங்குவதை நிர்வாண உறக்கம் என்று சொல்லப்படுகிறது. இது கொஞ்சம் வித்தியாசமாக கூட இருக்கலாம். ஆனால், இப்படி நிர்வாணமாக தூங்குவது உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படி தூங்குவதால் கவனச்சிதறல் ஏதும் இல்லாமல் நிம்மதியான தூக்கத்தை பெற முடியுமாம். ஆனால், ஒருவர் உள்ளாடையுடன் தூங்குவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
உள்ளாடையுடன் ஒருவர் தூங்கினால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி பார்க்கலாம் -
1. சிலருக்கு பிறப்புறுப்பில் அரிப்பு போன்ற அவுசரியம் ஏற்படும். இதனால், சொறி, கொப்புளங்கள், எரிச்சல் போன்ற பிரச்சினை ஏற்படுவதுண்டு.
2. உள்ளாடையுடன் தூங்குவதால் வியர்வை பிறப்புறுப்பில் தங்கும். அப்போது, அந்த இடத்தில் துர்நாற்றம் வீசும். இதை தடுக்க முடிந்தவரை உள்ளாடையுடன் தூங்குவதை தவிர்ப்பது நல்லது.
3. பிறப்புறுப்பில் தொற்று நோய் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. இதனால் சில நோய்கள்கூட தாக்கலாம், சில நேரங்களில் தூக்கத்தை கெடுக்கலாம்.
5. சில துணியால் செய்யப்பட்ட உள்ளாடை பிறப்புறுப்பு பகுதியில் ஈரப்பதத்தை உருவாக்கிவிடும். இதனால் ஈஸ்ட் பாக்டீரியா அதிகரித்துவிடும்.
6. இரவில் உள்ளாடையுடன் தூங்குவதால் அந்தரங்கப் பகுதியில் ரத்தம் ஓட்டம் சீராக இருக்காது. எனவே, உங்களுக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும் என்று நினைத்தால் உள்ளாடையுடன் தூங்குவதை தவிர்ப்பது நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |