மதுரையில் அரசு பேருந்தின் சக்கரம் சாலையில் கழன்று ஓடி விபத்து- மாணவர்கள் படுகாயம்
மதுரையில் அரசு பேருந்தின் சக்கரம் சாலையில் கழன்று ஓடி ஏற்பட்ட விபத்தில் 3 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
அரசு பேருந்து விபத்து
மதுரையில் இருந்து குற்றாலம் நோக்கி இன்று காலை அரசு பேருந்து ஒன்று சென்றது. அப்பேருந்தை சங்கரன் (வயது 55) என்பவர் ஓட்டி சென்றார்.
பேருந்து தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மதுரை- தென்காசி தேசிய நெடுஞ்சாலை சென்றபோது திடீரென பேருந்து சக்கரத்தின் அச்சு முறிந்தது. இ
தனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தின் பின் பக்கத்தில் உள்ள 2 சக்கரங்களும் தனியாக கழன்று சாலையில் ஓடியது.
எனவே பேருந்தில் அமர்ந்திருந்த 40 பயணிகளும் பேருந்தின் உள்ளே தூக்கி வீசப்பட்டனர். இதில் பின்பகுதியில் இருந்த 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதன் பிறகு சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து சென்று மாணவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஆய்க்குடி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அரசு பேருந்தின் சக்கரம் கழன்று சாலையில் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |