பித்தப்பை கற்களை 20 நாட்களில் வெளியேற்ற வேண்டுமா? இதோ சில ஆயுர்வேத வைத்திய முறைகள்!
பொதுவாக இன்றைய காலத்தில் பித்தப்பை கற்கள் பிரச்சனைக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. உணவில் கொழுப்புச்சத்து அதிகமாக சேர்த்துக் கொள்பவர்களுக்கு, கொழுப்பு கற்கள் உருவாகும்.
குறிப்பாக, உடல் பருமனாக உள்ளவர்களுக்கும், திடீரென்று உடல் இளைப்பவர்களுக்கும், கருத்தடை மாத்திரை அதிகம் உபயோகிப்பவர்களுக்கும் ஏற்படுகின்றன.
இந்த பிரச்னையில் பெண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். உடல் பருமன், வாயுத் தொல்லை, குழந்தை பேறு, 40 வயதை கடப்பது போன்ற காரணங்களால், பெண்களுக்கு பித்தப்பை கற்கள் உருவாகின்றன. இதனை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது.
அந்தவகையில் தற்போது பித்தப்பை கற்களை கரைக்க கூடிய ஒரு சில ஆயுர்வேத வைத்திய முறைகளை இங்கே பார்ப்போம்.
- இரவு உணவுக்கு பிறகு சூடாக ஒரு டம்ளர் பாலில் சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து குடிப்பதன் மூலம் இது பித்த திரவங்களை திரவமாக்குகிறது.
பித்த நாளங்களிலிருந்து பித்தப்பைகளை அகற்றுவதற்கு உதவுகிறது மேலும் செரிமானம் மேம்படுத்துகிறது. கல்லீரல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
- நெருஞ்சி சூர்ணாவாகவோ அல்லது தூள் வடிவிலோ எடுத்துவந்தால் பித்தப்பை நச்சுத்தன்மையை வெளியேற்றலாம்.
- வெங்காயம், கருப்பி மிளகும் ,மஞ்சள், இலவங்கப்பட்டை, பசு நெய் சேர்த்து சூப் வைத்து குடிக்கலாம். இது பித்தக்கற்களை உடைக்க செய்கிறது. பசு நெய் ஆனது கற்கள் வெளியேறுவதை எளிதாக்குகிறது, வலி நிவாரணத்துக்கும் உதவுகிறது.
- கற்றாழை இலைகளிலிருந்து ஜெல் பிரித்தெடுத்து சிறிது தேன் சேர்த்து தினமும் இந்த சாற்றை உட்கொள்வது பித்தப்பை கற்களை வெளியேற்ற செய்யும்.
- சில கருப்பு மிளகுத்தூளை உணவுக்கு முன்பு வெதுவெதுப்பான நீரில் எடுத்துகொள்வது கொழுப்பை சமப்படுத்தி பித்தப்பை கற்களை அகற்றுகிறது.
- பசு சிறுநீர் உடல் வெப்பத்தை அதிகரிக்கிறது. உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றூம் சமப்படுத்த இது உதவுகிறது. இது நல்ல சுத்திகரிப்பு ஆகும். பித்த ஓட்டத்தை ஒழுங்குப்படுத்துகிறது.
- காலை உணவுக்கு முன்பு வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நீரில் சிறிது ராக் சால்ட் சேர்த்து குடியுங்கள். இதை குடித்த பிறகு உங்கள் வலப்பக்கமாக படுத்துகொள்ளுங்கள். வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை செய்யுங்கள்.
- மஞ்சளை பயன்படுத்தலாம். சூடான தேநீராக்கி இதை குடிப்பதன் மூலம் இதன் கூர்மையான பண்புகள் கொழுப்பு மற்றூம் பித்தப்பைக்கற்களை கரைக்கிறது.
- கசப்பு சுவையை கொண்டிருக்க கூடியவை. இது பசியை அதிகரிக்கும். மஞ்சள் காமாலைக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளில் இதுவும் ஒன்றாகும் பெரிய அளவுகளில் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் இது உதவுகிறது. பித்தப்பையில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்க செய்கிறது.
- வெள்ளரி, பீட்ரூட் மற்றும் கேரட் சாற்றை சம பாகங்களில் கலந்து எடுக்கவும். அறுவை சிகிச்சை செய்யாத பித்தப்பை கற்களை வெளியேற்ற தினமும் இரண்டு முறை குடிக்கலாம்.
- புதினா தேநீர் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை குடியுங்கள். இது பிடிப்பை குறைக்கும் மற்றும் பித்தப்பைக்கற்களால் உண்டாகும் வலியை உடனடியாக நீக்குகிறது.
- எலுமிச்சைச்சாறு பேரிக்காய் சாறு மற்றும் ஆப்பிள் சாறு ஆகியவற்றை அடிக்கடி குடிப்பது பயனளிக்கும்.
- பேரிக்காய் சாறு அரை கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் நீர்த்த்போக செய்து அதில் ஒரு டீஸ்பூன் அளவு தேன் சேர்த்து குடியுங்கள். தினமும் மூன்று முறை குடிக்க வேண்டும்.