இரத்த சர்க்கரை 200க்கு மேல இருக்கா? அதை குறைக்க இதோ அற்புத வழிகள்
diabetes
By Kishanthini
பொதுவாக நீரிழிவு உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஏற்படுகிறது. ஆனால் உடலில் சர்க்கரை சரியான அளவில் இல்லாமல் குறைவாக இருந்தாலும் அது உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
எனவே சர்க்கரை அளவை நிர்வகிப்பதன் மூலம் நீரிழிவை சரி செய்ய முடியும். அதற்கு உதவும் சில மூலிகைகளை பற்றி இங்கே பார்ப்போம்.
- இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க நித்திய கல்யாணியின் இரண்டு இலைகளை எடுத்து அப்படியே சாப்பிடலாம். அல்லது ஒரு கப் தண்ணீரில் இந்த இலையை கொதிக்க வைத்து அதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும்.
- உணவை உட்கொள்வதற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு டீஸ்பூன் சிறுகுறிஞ்சான் இலை பவுடரை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் இது பயனுள்ள மூலிகையாக இருக்கிறது.
- ஒரு கப் தண்ணீரில் வேங்கை இலை தூளை சேர்த்து அதை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இது இரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.
- ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அமிர்தவல்லி இலை தூள் கலந்து இரவில் வைத்துவிட்டு காலையில் அதை குடிக்கவும். இந்த தாவரத்தின் இலையானது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.
- ஒரு ஸ்பூன் நாவல் விதை பவுடரை தண்ணீரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மையளிக்கும்.இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை அளிப்பதாக உள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US