மாதவிடாய் கோளாறை சரிசெய்யும் வெள்ளை செம்பருத்தி! எப்படி எடுத்து கொள்ளலாம்?
பொதுவாக இன்று இளம்பெண்கள் பலரும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். இயல்பாக வரக்கூடிய மாதவிடாய் தள்ளி வருவது தொடர்ந்து மூன்று மாதங்களாக இருந்தால் அது அலட்சியப்படுத்தக்கூடாது.
இதனால் அதிகமான உதிரபோக்கு, உதிரபோக்கு குறைந்த அளவு வெளிவருவது, மாதவிடாய் வராமல் இருப்பது என பிரச்சனைகள் தீவிரமாக கூடும். எனவே இவற்றை ஆரம்பத்திலே நீக்க வேண்டும்.
இதற்கு ஆயுர்வேத வைத்திய முறையை பின்பற்றினால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
தற்போது மாதவிடாய் கோளாறை சரிசெய்யும் வெள்ளை செம்பருத்தி பூவை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
- வெள்ளை செம்பருத்தி பூக்களின் மொட்டுகளை எடுத்து நன்றாக சுத்தம் செய்து உள்ளிருக்கும் மகரந்த காம்பை நீக்கி விட வேண்டும்.
- இதனுடன் அரிசி கழுவிய நீர் சேர்த்து மைய அரைக்கவும். அதிக நீர்ப்பதமாக இருக்க வேண்டாம்.
- பேஸ்ட் போல் இருந்தால் போதும். இதை தினமும் இரவு நேரத்தில் தூங்கும் போது ஒரு டீஸ்பூன் அல்லது அரை டீஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும்.
- உணவுக்கு பின்பு அல்லது முன்பு இரண்டு மணி நேர இடைவெளியில் சாப்பிட வேண்டும். இதை சாப்பிட்ட உடன் எதையும் சாப்பிட வேண்டாம். தொடர்ந்து ஏழு நாட்கள் வரை தவறாமல் சாப்பிட வேண்டும்.
நன்மைகள்
- ஆயுர்வேதத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை செம்பருத்தி பூக்கள் உயர்ந்த மருத்துவ குணங்களை கொண்டதாக சொல்லப்படுகிறது.
- இது ஆரோக்கியம் போன்று அழகு மற்றும் முடி உதிர்தல் பிரச்சனைக்கும் தீர்வாக பயன்படுத்துகிறது.
- கருப்பை நோய்களை போக்கும் தன்மை செம்பருத்திக்கு உண்டு.