கோவையில் அய்யப்ப சுவாமி சிலை கண் திறந்ததாக பரபரப்பு! வைரலாகும் வீ்டியோ
கோவையில் அய்யப்பன் சுவாமி கண் திறந்ததாக கூறப்பட்ட அற்புத நிகழ்வு பக்தர்களிடையே பரபரப்பையும் பரவசத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கோவை செல்வபுரம் தில்லை நகரில் தில்லை விநாயகர் கோவில் அய்யப்ப சுவாமிக்கு 40-ம் ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பூஜையின்போது அய்யப்ப சுவாமி சிலைக்கு நெய்யபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
இந்தவேளையில் அய்யப்பன் சுவாமியின் சிலை கண் திறந்து மூடுவது போல காட்சியை பலரும் கண்டு பரவசமடைந்துள்ளனர்.
இந்த அற்புத காட்சியை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவையில் அய்யப்ப சுவாமி கண் திறந்ததாக வைரலாகும் வீடியோ!#kovai #margazhi #margazhiuthiram #karthigai #ayyappa #ayyappan #swamiyesaranamayyappa #Aanmigam #trending #Dailythanthi #dt pic.twitter.com/HXfdxyKM1d
— DailyThanthi (@dinathanthi) December 29, 2021