இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடுவோம்! வரலாற்றை மாத்துவோம்... கெத்தாக பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்
முந்தைய ஆட்டங்களின் முடிவுகள் குறித்து கவலையில்லை என பாகிஸ்தான் அணி கேப்டன் பாபா் அசாம் கூறியுள்ளாா்.
உலகக்கோப்பை டி20 தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரையில் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் இந்தியாவை ஒருமுறை கூட வென்றதில்லை.
இது குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், உலகக் கோப்பைகளில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் மோசமான ஆட்டங்கள் குறித்து நினைத்து தூக்கத்தை தொலைக்காமல் தற்போதைய நிலை குறித்து நாங்கள் கவலைப்படுவோம்.
உண்மையாக நாங்கள் முந்தைய ஆட்ட முடிவுகள் குறித்து கவலைப்படவில்லை. எங்கள் பலம், திறமை, குறித்தே சிந்தித்து வருகிறோம்.
பல ஆட்டங்களில் ஆடியுள்ளோம். சாம்பியன்ஸ் கோப்பையிலும் சிறப்பாக ஆடினோம். சிறப்பாக ஆடி, நல்ல முடிவுகளை பெற முயல்வோம்,
எப்போதுமே நான் எளிமையாக இருக்கும் விஷயத்தில்தான் கவனம் செலுத்துவேன். என்னுடைய வழக்கமான ஆட்டத்தை விளையாடுவேன். ஒவ்வொரு பந்தையும் நிதானமாக ஆடுவேன். கடந்த கால வரலாற்றை விடுங்கள். நாங்கள் சிறப்பாகத் தயாராகி இருக்கிறோம். கடந்த கால வரலாறுகள், சாதனைகள் மாற்றப்படும்.என கூறியுள்ளார்.