லண்டனில் ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 3 பச்சிளம் குழந்தைகள்: துப்புத்துலங்காமல் திணறும் அதிகாரிகள்
லண்டனில் மூன்று முறையாக கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட 3 பச்சிளம் குழந்தைகள் தொடர்பில் துப்புத்துலங்காமல் பொலிசார் திணறி வருகின்றனர்.
மூன்று பச்சிளம் குழந்தைகள்
லண்டனில் கடந்த 2017 முதல் ஒரே இடத்தில் மூன்று பச்சிளம் குழந்தைகளை பொலிசார் மீட்டுள்ள நிலையில், பெற்றோர் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு லண்டனில் 2017, 2019 மற்றும் 2024ல் ஒரே இடத்தில் மூன்று பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், டி.என்.ஏ சோதனையூடாக அந்த மூன்று பிள்ளைகளும் உடன்பிறந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, லண்டன் பெருநகர பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், அந்த மூன்று பிள்ளைகளின் பெற்றோர் அடையாளம் காணப்படவில்லை என்றும், அவர்கள் தொடர்பில் இதுவரையான விசாரணையில் உறுதியான தகவல் ஏதும் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
விசாரணை அதிகாரி Jamie Humm தெரிவிக்கையில், லண்டனின் நியூஹாம் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று குழந்தைகளின் பெற்றோரை அடையாளம் காணும் விசாரணை தொடர்கிறது.
மேலும், 2024ல் மீட்கப்பட்ட குழந்தை எல்சா தொடர்பில் சுமார் 450 மணி நேர கண்காணிப்பு கமெரா பதிவுகளை ஆய்வுக்கு என சேகரித்துள்ளதாகவும், அதில் இருந்து கிடைத்த சில தரவுகளின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டதாகவும்,
மூவரும் உடன்பிறப்புகள்
மிக சமீபமாக பொதுமக்கள் சிலரிடம் இருந்து கிடைத்த தொலைபேசி தகவல்களும் விசாரணைக்கு உதவும் வகையில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், குழந்தை எல்சா தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து தகவல்களுக்காக காத்திருப்பதாகவும் விசாரணை அதிகாரி Jamie Humm குறிப்பிட்டுள்ளார்.
குழந்தை எல்சா பிறந்து ஒரு மணி நேரத்தில் தாயாரால் கைவிடப்பட்டுள்ளார். இந்த ஆண்டு ஜனவரி 18ம் திகதி கிழக்கு ஹாமில் உள்ள கிரீன்வே மற்றும் ஹை ஸ்ட்ரீட் சவுத் சந்திப்பில் ஒரு ஷாப்பிங் பையில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை எல்சா காணப்பட்டார்.
இதேப் போலவே 2019 ஜனவரி மாதமும் 2017 செப்டம்பர் மாதமும் இரு குழந்தைகள் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டனர். தற்போது மூவரும் உடன்பிறப்புகள் என்பது டி.என்.ஏ சோதனையில் உறுதியாகியுள்ளது.
மேலும், குழந்தை எல்சா மீட்கப்படும் முன்னர் அப்பகுதியில் காணப்பட்ட பெண் ஒருவருக்கு இந்த விவகாரத்தில் உரிய தகவல் தெரிந்திருக்கலாம் என்று பொலிசார் நம்புகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |