கொல்லப்பட்ட இலங்கையரின் 2 குழந்தைகளை கவனித்து வந்த பெண்! முதல்முறையாக சொன்ன உருக்கமான தகவல்கள்

death australia kids indikagunathilaka baby sitter
By Raju Feb 01, 2022 11:05 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் இரண்டு குழந்தைகளை கொன்று இலங்கையர் தற்கொலை செய்த நிலையில் அவரின் குழந்தைகளை பராமரித்து வந்த பெண் உருக்கமாக பேசியுள்ளார்.

Huntingdaleல் வசித்து வந்த இலங்கையரான 40 வயது இந்திகா குணத்திலகாவுக்கு 6 வயதில் கோஹன் என்ற மகனும், 4 வயதில் லில்லி என்ற மகளும் இருந்தனர். மூன்று தினங்களுக்கு முன்னர் தனது இரண்டு பிள்ளைகளையும் கொன்றுவிட்டு, குணத்திலகாவும் தற்கொலை செய்து கொண்டார்.

மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த குணத்திலகா சில காலமாகவே மிகுந்த மன அழுத்தத்திலும், உளவியல் ரீதியான பிரச்சனைகளை சந்தித்து வந்திருக்கிறார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது குழந்தைகளை குறித்து முன்னர் குணத்திலகா வெளியிட்ட பதிவுகள், வீடியோக்கள் சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த பதிவுகளின் கீழ் பலரும், உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டு வருகின்றனர். ஒருவர் வெளியிட்ட பதிவில், நீங்கள் இதை செய்திருக்கக்கூடாது, அந்த இரண்டு அழகான தேவதைகளும் ஒன்றும் அறியா அப்பாவிகள் என பதிவிட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட இலங்கையரின் 2 குழந்தைகளை கவனித்து வந்த பெண்! முதல்முறையாக சொன்ன உருக்கமான தகவல்கள் | Baby Sitter About Gunathilaka Kids Sri Lankan

மற்றொருவரின் பதிவில், குணத்திலகா குணம் பற்றி முடிவு செய்ய நமக்கு உரிமை கிடையாது. அவர் மிகவும் சிரமமான மனநிலையில் இருந்திருக்கிறார் என பதிவிட்டுள்ளார்.

ஆனாலும் சிலர் குழந்தைகளை இரக்கமின்றி கொன்ற மனநோயாளி அவர் என பதிவிட்டுள்ளனர். இதனிடையில் குணத்திலகாவின் குழந்தைகளான லில்லி மற்றும் கோஹன் ஆகியோர் சிறு குழந்தைகளாக இருந்தது முதலே அவர்களை பெண்ணொருவர் பராமரித்து வந்திருக்கிறார்.

அவருக்கு இருவரும் கொல்லப்பட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. பெயர் வெளியிட விரும்பாத அப்பெண் கூறுகையில், விஷயத்தை கேள்விபட்டவுடன் என் மனம் உடைந்துவிட்டது. நாள் முழுவதும் அழுது கொண்டிருந்தேன்.

நான் லில்லி மற்றும் கோஹனை எல்லா நேரமும் கவனித்து வந்திருக்கிறேன். அவர்களும் எல்லா குழந்தைகளை போல சாதாரண குழந்தைகள் தான். அழகாகவும், ஆற்றல் நிறைந்தவர்களாகவும், எப்போதும் மகிழ்ச்சியாகவும் இருவரும் இருந்தனர் என சோகத்துடன் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த மரணங்களுக்கான சரியான காரணம் மற்றும் சூழ்நிலைகள் முழுமையாக ஆராயப்படும் என காவல்துறை அதிகாரி ஆலன் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட இலங்கையரின் 2 குழந்தைகளை கவனித்து வந்த பெண்! முதல்முறையாக சொன்ன உருக்கமான தகவல்கள் | Baby Sitter About Gunathilaka Kids Sri Lankan

மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US