கொரோனாவால் இதய நோயாளிகள் ஆயிரக்கணக்கானோர் இறக்கும் அபாயம்! நிபுணர்கள் எச்சரிக்கை
கொரோனாவால் இதய நோயாளிகள் ஆயிரக்கணக்கானோர் இறக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனாவால் இதய நோயாளிகளின் குறைபாடுகள் சரியாக ஐந்து ஆண்டுகள் ஆகும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், சிகிச்சை அளித்து காப்பாற்றக்கூடிய நிலைமைகளில் இருக்கும் ஆயிரக்கணக்கானோர் இதய நோயாளிகள் இறக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் இடையூறால், life-saving diagnosis மற்றும் சிகிச்சைக்காக காத்திருக்கும் இதய நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என புதிய பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது.
அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜனவரி 2024-ல் சிகிச்சைக்காக காத்திருக்கும் இதய நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 5,50,385 ஆக உயரும் என்று பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷன் மதிப்பிட்டுள்ளது.
சிறப்பாக செயல்பட்டால் கூட, தொற்றுநோய்க்கு முந்தைய அளவிற்கு சிகிச்சைக்காக காத்திருக்கும் இதய நோயாளிகளின் எண்ணிக்கையை குறைய மூன்று ஆண்டுகள் ஆகும் என தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.