பயணிகளுக்கு ஒரு கெட்ட செய்தி...ஜேர்மன் ரயில்வே யூனியன் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
ஜேர்மனியில் ரயில் சாரதிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள விடயம் பயணிகளுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
ஊதிய பிரச்சினையைக் காரணம் காட்டி ஜேர்மன் ரயில் சாரதிகள் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.
சரக்கு ரயில்கள் நேற்று (புதன்கிழமை) மதியம் முதல் வேலை நிறுத்தத்தில் இறங்கிய நிலையில், இன்றுமுதல் பயணிகள் ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த வேலை நிறுத்தம் வரும் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி வரை நீடிக்கும் என கூறப்படுகிறது.
600 யூரோக்கள் கொரோனா வைரஸ் போனஸ் அளிப்பதாகவும், விரைவில் ஊதியத்தை அதிகரிப்பதாகவும் ரயில்வே நிறுவனம் தெரிவித்தும் பணியாளர்கள் அதற்கு உடன்படவில்லை.
ஆகவே, ’பயணிகளுக்கு ஒரு கெட்ட செய்தி, வேலை நிறுத்தம் தொடரும்’, என ரயில்வே யூனியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.